க்ளிக் ஆர்ட் மியுசியம் இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்

கிழக்கு கடற்கரை சாலையில் புதியதொரு மணி மகுடம் க்ளிக் ஆர்ட் மியுசியம். விஜிபியில் இருக்கும் இது, இந்தியாவின் மாபெரும் ஸ்னோ கிங்டத்தில் 2000 சதுரடி இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமாகும் (Trick Art Museum).

“தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவியமாகத் தெரியும் விதமான தந்திரங்கள் நிறைந்த கலை பொருள்கள் நிறுவப்பட்டிருக்கும் முதல் வகையான அருங்காட்சியமாகும். இதுவரை ஓவியம் என்பது அழகியல் தன்மை கொண்டது, கலைப் பொருள் சேகரிப்பாளர்களுக்கான முதலீடு அல்லது தெய்வீகமானது என்றுதான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஓவியம் அல்லது ஓவிய அருங்காட்சியகமானது வேடிக்கையானதாக, நகைச்சுவை ததும்பும் விதமாக, உரையாடல்தன்மை கொண்டதாக இருப்பின் எவ்வாறு இருக்கும்? தந்திரக் கலை ஓவியங்கள் என்பது அத்தகையதொரு கலை, பங்கேற்பாளர் இன்றி அவ்வோவியங்கள் முற்று பெறாது. புதிராக இருக்கிறதா? இந்தத் தந்திரக் கலையானது “ஒளியியல் மாயக் கலை” (Optical Art) அல்லது முப்பரிமாண ஓவியங்கள் (3D Art) என்றும் அறியப்படுகிறது. அதாவது இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, ஒருவித வேடிக்கையான செய்கையுடன் பங்கேற்பாளரின் பங்களிப்பை கோருவதாகவும் இருக்கும். பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். சந்தேகத்திற்கிடமின்றி, இதற்கு முன்னர் ஓவியக் கலை என்பது இப்படி ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் இருந்ததில்லை!

‘க்ளிக் ஆர்ட் மியுசியம்’ என்பது மாபெரும் ஒளியியல் மாய ஓவியங்கள் நிறைந்த இடமாக, உங்கள் அதிக மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இடமாக இருக்கும்! கச்சிதமான உள்கட்டமைப்பும், புதுமையான ஓவியங்களும் பார்வையாளரை வேறொரு உலகத்திற்கு, ஒரு மாய உலகிற்குக் கூட்டிச் செல்லும். அம்மாய உலகில் நீங்கள் மோனா லிசாவின் விருந்தாளியாகவோ, அட்லஸின் நண்பராகவோ இருக்கக் கூடும்! யார் அறிவார்?

தந்திரக் கலை பற்றிய வரலாறு (HISTORY OF TRICK ART)

இக்கலை 2,000 வருடங்கள் பழமையானது என்றும், மறுமலர்ச்சி காலத்தில் அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஓவிய வடிவமாக உருவாகிற்று என்றும் சொல்லப்படுகிறது. ‘டொம்போ-ல-ஈல்’ என்பது இதன் ஃப்ரென்ச்சுப் பெயர். ‘கண்களை ஏமாற்று’ எனும் பொருள் கொண்ட கலைச் சொல்லை அதுப் பெற்றிருக்கிறது. இரு-பரிமாண ஓவியங்களை முப்பரிமாணத் தன்மையுடன், ஒரு நிஜப் பொருளாக காண்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட வடிவமிது. அரைகள், உண்மையில் இருக்கும் அளவைக் காட்டிலும் பெரியதாகத் தெரிய வேண்டும் என்பதற்காக க்ரேக்கம் மற்றும் ரோமத்தில் இந்த ஓவிய வடிவம் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. மேற்கத்திய ஓவியங்களில் பல காலங்களாக இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக மேற்கூரை வரைய. அக்காலத்தில், தட்டையானதொரு மேற்கூரையைக் கூட கவிந்த கூரையாகக் காட்டும் அளவுக்குத் திறமை வாய்ந்த ஓவியர்களாக இருந்தார்கள்.

14ஆம் நூற்றாண்டில் கட்டிடக் கலையில் தோன்றிய தொலைவுத் தோற்ற (perspective) காட்சியாக்கத்தின் விளைவாக, ஓவியக் கலை மற்றும் கட்டிடக் கலையில் பரந்த காட்சி வித்தைகளின் தேவை அதிகரித்தது. ஒளியியல் மாயை மூலம் கண்களை ஏமாற்றும் அந்த காட்சிக் கலை தொழில்நுட்பமானது பின்னர் மாய-யதார்த்த உருவப் படங்கள் வரைவதற்கான ஒரு பாணியாக மாறி 17ஆம் நூற்றாண்டு வாக்கில் ஃப்ரென்ச்சு மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியில் பிரபலமானது. கிரேக்கம் மற்றும் ரோமத்தில் அதன் வேர்களைக் கொண்டக் இக்கலையானது போம்பெய் போன்ற பழமைவாய்ந்த நகரங்களில் இன்றும் காணலாம். பண்டைய கிராக்க ஓவியர் ஜீயுசிஸ் மற்றும் அவரது பரம வைரி ஃபர்ஹாசியஸின் கதை ஓவியம் பிரபல உதாரணம்.

புத்திசாலித்தனமான நிழலோவியமும், சுற்றளவுக்கு வெளியே வரையப்பட்டிருக்கும் செய்கையும் பார்வையாளரிடம் ஒருவித மாயாவாதப் புலனுணர்வைத் தூண்டுகிறது, அவ்வோவியத்தில் காணப்படும் செய்கைக்கு ஈடாக அல்லது பதிலாக ஒரு செய்கையில் ஈடுபட தூண்டுவதன் மூலம் இது பார்வையாளர் பங்கேற்பைக் கோருகிறது. ஒரு ஓவியக் களத்தில் ஓவியரும் பார்வையாளரும் போரில் ஈடுபடுவது போன்றதொரு நிகழ்வது. அந்த ஒளியோவிய மாயையானது மனிதருக்குள் இருக்கும் இயல்பான ஆர்வக் கோளாரை தூண்டி, கண் முன் இருக்கும் அந்தப் பொருள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிக்க மூளைக்குக் கட்டளையிடுகிறது. எந்த ஒன்றையும் சரியாகக் கண்டுபிடித்தே ஆக வேண்டும், அறிந்தே ஆக வேண்டும் என்ற மனித இயல்பூக்கங்கள் இங்கே தூண்டப்பெருகின்றன. அதனால் மூளைக்கும் கண்களுக்கும் இடையில் ஒரு போரே நிகழ்கிறது. அனுபவங்கள் வாயிலாகவும், அனுமானங்கள் மற்றும் முன் முடிவுகள் மேற்கொள்ளும் பண்புகளாலும் மூளையில் முன்பதிவாக இருக்கும் காட்சிப் படிமங்கள் எதிரில் தெரியும் ஓவியம் என்ன சொல்கிறதென சட்டென முடிவெடுக்கத் தூண்டுகிறது, அதேவேளை ஆழ் மனதோ உண்மையைக் கண்டுபிடித்து அதை வெளிப்படுத்தப் போராடுகிறது. இதுதான் க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகம் உங்களுக்குக் கொடுக்கப் போகும் புதுமையானதொரு அனுபவம். ஒவ்வொரு கோணத்திலும் இடத்திலிருந்தும் காணும்போதும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தந்திரக் கலை ஓவியங்களும் வேறு வேறு மாதிரித் தெரியும். புகைப்படக் கருவி கொண்டு காண்கையில் அந்த ஓவியங்களின் மாய அழகு பரம்மாண்டமாகத் தோன்றும்.

இந்தத் தந்திரக் கலை ஓவியங்களைக் காண்பதால் மூளை ஆரோக்கியமானதொரு புறத் தூண்டுதலைப் பெருவதாகசமீப காலங்களில் நடந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளை அனுபவிக்கும் மாற்றங்கள் மனிதனின் அடிப்படை இயல்பூக்கத்திற்கு சவாலாக அமைவதால் இத்தூண்டுதல் நல்ல மன எழுச்சியைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.
உங்களுக்கு அங்கு என்ன காத்திருக்கிறது?

வேடிக்கை, நகைச்சுவை ஆனால் நிச்சயமாக நீங்கள் மூட்டாளாக்கப்பட மாட்டீர்கள்! சொல்லப் போனால் உங்கள் மூளைக்கு வேடிக்கையானதொரு பயற்சி காத்திருக்கிறது. “கண் கட்டு வித்தைக்கு தயாராக வாருங்கள்”. வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் சில:

1. “மாமா – யு வான ஹேட் மீ” – ஆதாம் ஆப்பிள் கொடுப்பது போன்ற ஓவியம்.
2. “… இப்போது சிறந்த அவார்டைப் பெறுபவர்” – ஆஸ்கர், ஆஸ்கர் அவார் தரப்போகிறார்.
3. “நீங்களும் தேவதைகளே” – உடலற்ற இரண்டு தேவதைகள் இருக்கும். நீங்கள் அங்கு தேவதைகளாவீர்கள்.
4. “டால்ஃபினும் நானும்” – சட்டகத்திலிருந்து குதிக்கும் டால்ஃபினுக்கு வளையம் கொடுங்கள்.
5. “தி கட்டிங் எட்ஜ்” – மாயக் கலை நிபுணர் ஒருவர் உங்கள் உடலை இரண்டாக வெட்டி அருகில் வைத்தால் எப்படி இருக்கும்?
6. “நடுவுல கொஞ்சம் கதவைக் காணோம்” – நீங்கள் கழிப்பறையில் இருக்கும்போது யாரேனும் எட்டிப் பார்த்தால் எப்படி இருக்கும்?
7. “நீ என்ன பெரிய அப்பா டக்கரா” – அந்த சட்டகத்திலிருந்து சீறிக் கொண்டுவ் அரும் நாகப் பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களிடம் உள்ளதா?
8. “வெனிஸ் ஒன்றும் தூரமில்லை” – வெனிசில் படகில் போகும் கனவு காண்பவரா நீங்கள், அப்படியென்றால் இது உங்களுக்கான இடம்.
9. “காபியைக் காட்டிலும் அந்த புன்னகை ஆவலைத் தூண்டக்கூடியது” – மோனலிசாவின் விருந்தாளியாக விரும்புகிறீர்களா? உங்களுக்காக அவள் காபியோடு காத்திருக்கிறாள்…
10.“மோனலிசவுடன் காபியும் இசையும்” – உங்களுக்கு காபி கொடுத்து இசைக்கவும் காத்திருக்கிறாள் மோனலிசா.
11.“அம்மாவின் கருவறை” – தாயின் கருவரைக்குள் மீண்டும் செல்லும் உணர்வு அந்த மாபெரும் குமிழியில்.
12. “செல்ஃபி புள்ள” – சிம்பான்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் பாவம் அதை பயமுறுத்திவிடாதீர்கள்!
13. “அப்பாடா, ஒருவழியாக வைர மோதிரம் கிடைக்கப் போகிறது” – அட்லஸ் உங்களுக்காக காத்திருக்கிறார்.
14. “மண்டைத் தீவு” –மண்டையோட்டுக் கோட்டைக்குள் படியேறிப் போகும்போது கவனம்!

இந்தப் பட்டியல் வெறும் ட்ரெய்லர் மட்டுமே. உண்மையில் க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில் இதுபோல் மொத்தம் 24 ஓவியங்களுடன் உங்களுக்கு “அற்புத வேடிக்கை அனுபவம்” காத்திருக்கிறது. இங்கு எந்த விதிகளும் கிடையாது, உண்மையில் செய்யக்கூடாதவை என்று எதுவுமில்லை, வழக்கமாக இதுபோன்ற பொது உடங்களில் எதையெல்லாம் அனுமதிக்க மாட்டார்களோ அதற்கெல்லாம் “க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகத்தில்” இடமுண்டு. வேறென்ன வேண்டும்! உங்கள் விருப்பம் போல் புகைப்படம் எடுங்கள், காட்சிப் பொருள்களைத் தொட்டுப் பாருங்கள், சத்தமாக சிரித்து மகிழுங்கள், தேவைப்பட்டால் தரையில் படுத்து உருளுங்கள், ஏனென்றால் அங்குள்ள ஓவியங்களைக் காணும்போது உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது! கலை நயத்துடன் கூடிய ஒரு வேடிக்கை விநோத மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரே கலை அருங்காட்சியகம் க்ளிக் ஆர்ட் மியுசம் மட்டுமே. கிளம்புங்கள், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நடிகரை, ஒளிப்பதிவாளரை அல்லது இயக்குனரை வெளியே விடுங்கள்! அவர் சொல்வதை மட்டும் கேளுங்கள்! ஆர்பாட்டம்தான்!

சிறப்பம்சங்கள்: உண்மையில் இது அற்புத வேடிக்கை தரப்போகும் இடம்.

· உரையாடல் தன்மை கொண்டஇந்தியாவின் முதல் முப்பரிமாண “தந்திரக் கலை” அருங்காட்சியகம்.

· பங்கேற்பாளரின்றி ஓவியங்கள் முழுமை பெறாது!
· புலுனுணர்வு மாயைத் தூண்டப் பெற்று மூளைக்கு தூண்டுதல் கிடைக்கிறது, வேடிக்கையான முறையில் மூளைக்கு பயிற்சி.
· 24 வகையான தந்திரக் கலை ஓவியங்கள் முன் “கண் கட்டு வித்தை”
· புகைப்படம் எடுக்கலாம், காட்சிப் பொருள்களைத் தொடலாம், சத்தமாகச் சிரிக்கலாம். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரை வெளியே விடுங்கள்!

உள்ளே ஒரு சுற்றுலா:

அருங்காட்சியகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருக்கும் உதவியாளர் ஒருவர் அருங்காட்சியகம் பற்றியும் அங்குள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கு நீங்கள் எப்படிச் சுற்றித் திரியலாம், எங்கு நின்று எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்றெல்லாம் விளக்குவார். உள்ளே, முக்கியமான இடங்களில் விளக்கக் காணொளிப் படங்களும் திரையிடப்பட்டிருக்கும், அது உங்களை ஒரு ‘கலைப் போருக்குத்’ தயாராக்கும்.

இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கியவர் குறித்து:
(ABOUT THE CREATOR)

க்ளிக் ஆர்ட் அருங்காட்சியகம் எனும் இந்த கருவையும் வடிவத்தையும் உருவாக்கியவர் ஓவியர் ஸ்ரீதர். இவர் காரைக்குடி அருகில் இருக்கும் பள்ளத்தூர் எனும் ஒரு கிராமத்தில் பிறந்தவர். வெற்றியை இலக்காக வைத்து ஒரே வடிவிலான ஓவியங்களோ அல்லது தொழிலையே மேற்கொள்ள விரும்பாத இவர் ஒரு சிறந்த ஓவியர், ஓவித் துறையில் இரு சாகசக்காரர் என்றே சொல்லலாம். யாரும் எடுக்கத் துனியாத பாதையில் பயணிப்பதே இவருக்குப் பிடித்தமானது.

இதுவரை அவர் 62 ஓவியக் கண்காட்சிகள் வைத்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. வித்தியாசமான சிந்தனையுடன், புதுமையான தொழில்நுட்பத்துடன் இவர் படைக்கும் ஓவியங்கள் கமலஹாசன், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளை அலங்கரித்துள்ளது. இதுதவிர இவரது ஓவியங்கள் மாபெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் பிரதான தேர்வாக இருக்கிறது. விருதுகள், பிரபலங்களின் பாராட்டுகளோடு இவர் ஓய்ந்துவிடவில்லை, என்றென்றைக்கும் புதிய உற்சாகத்துடன் புதிய புதிய விஷயங்களைப் படைக்கும் ஆர்வத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறார். இதுபோன்ற எண்ணற்ற புதுவகையான படைப்புகளை நமக்காக படைக்க விரும்பும் ஸ்ரீதரின் வேட்கை என்றைக்கும் தணியாது.