நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி தளபதி ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள் !

எண்ணிலடங்கா ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய் .இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகின்றனர் .

இதுபோலவே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் :

மடிக்கணினி – 1 நபருக்கும்
தையல் இயந்திரம் -5 நபர்களுக்கும்
3 சக்கர வாகனம் – 2 நபர்களுக்கும்
சலவைப்பெட்டி – 5 நபர்களுக்கும்
ஆட்டோ ஓட்டுநர் சீருடை – 15 நபர்களுக்கும்
இலவச புடவைகள் – 350 நபர்களுக்கும்
சில்வர் குடம் – 700 நபர்களுக்கும்
சம்மதம் – 30 நபர்களுக்கும்
டீ பாய்லர் மிசின் – 3 நபர்களுக்கும்
ஸ்ட்டவ் அடுப்பு – 7 நபர்களுக்கும்
பழவண்டி – 1 நபருக்கும்
இட்லி பாய்லர் – 6 நபர்களுக்கும்
பள்ளிக்கு மின்விசிறி – 3
பள்ளிக்கு சில்வர் தண்ணீர் பாத்திரம் – 3

ஆகிய நலத்திட்ட உதவிகள் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு . புஸ்ஸி .N .ஆனந்து (EX MLA ) அவர்கள் வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாமக்கல் மாவட்ட தலைவர் ஆனந்து , செயலாளர் சதீஸ் ,பொறுப்பாளர் பாலா ,ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி ,நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.