இந்த “காதல்” இந்த சமூகத்தை சும்மா விடாது . இயக்குனர் பா .ரஞ்சித்

பொதுவாக  தமிழ் சினிமாவில்  கிராமங்கள்  என்னவாக  இருக்கிறது , கிராமங்களின் தெருக்கள்  என்னவாக  இருக்கிறது  கிராமங்களில் வாழும்  மக்கள் , எப்படிப்பட்ட  அடையாளமாக  இருக்கிறார்கள்  என்பதைப்பற்றி எனக்குள்  ஒரு கேள்வி    இருந்து வந்தது .  முதன் முதலாக  வெண்ணிலா கபடிக்குழு   படம் பார்த்தபோது  கிராமங்களில்  இருக்க கூடிய  அரசியல் , அதுவும் விளையாட்டில்  இருக்கும் அரசியலை மிக  அழகாக ஒரு வணிகசினிமாவில் காட்சி படுத்தியிருந்தார் சுசீந்திரன் ,
 அதே போல இன்றைய கிராமங்களில் பொதுப்பயன்பாட்டிற்குள்  இருக்கிற அரசு  பொதுவுடைமை என்னவாயிருக்கிறது , யாருடைய  சொந்தமாயிருக்கிறது என்கிற  ஒரு கேள்வியிருக்கிறது , அந்தக்கேள்விக்கு  இந்தப்படம்  நிச்சயமாக  ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் .
இந்தப்படத்தில்  வரும் டிரெயிலரும்  , பாடல்களும்  அதை தான்  திருப்பி  திருப்பி  சொல்ல வருகிறது .   இந்த “காதல்” இருக்கிறதே அது சும்மாயிருக்காது . “மாவீரன் கிட்டு ” படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டுபண்ணும் .”காதல்” இந்த  சமூகத்தை  மாற்றியே  தீரும் . சமூகத்தில்  காதலால்  மட்டுமே  புரட்சியை  உண்டுபண்ண  முடியும் . என்கிற  நம்பிக்கையை உண்டு .
அந்த  வகையில்  சுசீந்திரன் , யுகபாரதி , இமான்  கூட்டணியில் உருவாகும்  இந்தப்படம்  சமூகத்துக்கான  நல்ல கருத்துக்களை  பேசக்கூடிய படமாக  இருக்கும் என்று நினைக்கிறேன் . இந்தமாதிரியான  படங்கள்  கமர்ஷியல்  ரீதியாக  வெற்றிபெற்றால்  மட்டுமே இந்தமாதிரியான  படங்கள்  எடுக்கமுடியும்  என்கிற நம்பிக்கை  கலைஞர்களுக்கு ஏற்படும் . தயாரிப்பாளர்களும்  தயாரிக்க  முன்வருவார்கள் , தமிழ் ரசிகர்கள்  எந்தப்படத்தையும்  தரம்பிரித்து பார்ப்பதில்லை , இந்தப்படம்  கமர்சியல் ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும்  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  நம்பிக்கை எனக்கு இருக்கிறது  . என்றார்