சைக்கோ திரில்லராக உருவாகியிருக்கும் “யாரோ” !

TAKEOK PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்ப்டம் “யாரோ”. மனிதனுக்கு ஏற்படும் கனவினை மையமாக வைத்து, மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை TRIDENT ARTS சார்பில் R. Ravindran வழங்குகிறார். இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வெங்கட். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகி வரும், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினரும் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்

தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியதாவது…
‘யாரோ’ திரைப்படம், ஐடி துறையில் அமெரிக்காவில் வேலை பார்த்துகொண்டிருந்த வெங்கட், சினிமா ஆசையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரிடம் புதிய சின்ன பட்ஜெட் படங்கள் ஓடுவதில்லை என்று சொன்னேன். ஆனால் அவர் பணமே வேண்டாம், ஆனால் நீங்கள் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றார். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் சந்தீப் சாய் அழகாக இயக்கியிருக்கிறார். இப்படத்தை பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிடுகிறோம் உங்களுக்கு பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் சந்தீப் சாய் பேசியதாவது…
நானும் வெங்கட்டும் ஐடியில் ஒன்றாக வேலை செய்தோம், இருவருக்கும் சினிமா ஆசை இருந்தது, வேலையை விட்ட பிறகு ஒரு குறும்படம் செய்தேன் அதைபார்த்துவிட்டு வெங்கட் படம் செய்யலாம் என்றார், அப்படித்தான் இப்படம் துவங்கியது. அவர் மிக அர்ப்பணிப்புணர்வுடன் படத்தை செய்திருக்கிறார். என்னுடைய குழுவினரால் தான் இப்படம் அழகாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் ஜோஷ் அவரது இசை தான் படத்தின் முழு பலமும். அவரில்லாமல் படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. ஒளிப்பதிவாளர் பிரபு என்ன சொன்னாலும் அதனை கூலாக கையாண்டு, திரையில் அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார். எங்கள் குழுவினருக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். படத்தின் இறுதி வரையிலும், பரபரப்பாக புதுமையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து தான் படத்தை எழுதினோம், படத்தை பார்க்கும்போது நீங்களும் அதை உணர்வீர்கள். இப்படம் உருவாக முழுக்காரணம் என் நண்பர் வெங்கட் தான். இந்தக்கதையை அவ்வளவு எளிதாக யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் அவர் இந்தப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து உழைத்திருக்கிறார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் நன்றி.

ஒளிப்பதிவாளர் KB பிரபு கூறியதாவது…
குறும்படம் செய்து தான் திரைத்துறைக்குள் வந்தேன். என் ஒளிப்பதிவில் இன்னொரு படமும் தயாராகிவருகிறது. இயக்குநர் சந்தீப்பை எடிட்டர் மூலமாக தான் சந்தித்தேன் மிக திறமையானவர். நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் அனில் கிரிஷ் பேசியதாவது…
நாங்க இளைஞர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம் எப்போது இந்தப்படம் வெளியாகுமென ஆவலாக இருந்தேன். இப்போது சரியான நேரத்தில் வெளியாகிறது. சந்தீப் என் நண்பர் இந்தப்படத்தின் கதை உருவான சமயத்தில் இருந்தே தெரியும். படத்தில் வேலை பார்த்த அனைவரும் நண்பர்கள் தான். நான் லீனியர் பேட்டர்னை எடிட்டிங்கில் முயற்சித்துள்ளோம். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். இந்தப்படத்தை அழகாக உருவாக்கியுள்ளோம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜோஷ் ஃப்ராங்க்ளின் பேசியதாவது…
நான் இதற்கு முன் “நெடுநல் வாடை” படம் செய்துள்ளேன், அப்படத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இது என் இரண்டாவது படம் இயக்குநர் சந்தீப் 10 ஆண்டுகளாக என் நண்பர். இந்தப்படத்தில் பாட்ல்களை விட பின்னணி இசைக்கு அதிகம் உழைத்திருக்கிறோம். ஒரு புதுமையான திரில்லர் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறோம் நன்றி

தயாரிப்பாளர், நடிகர் வெங்கட் பேசியதாவது…
தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு முதலில் நன்றி. மிக இயல்பாக என்னிடம் பழகி, எனக்கு சினிமா பற்றி சொல்லி தந்து, இப்படத்தை வெளியிடுவதற்கு நன்றி. இப்படம் திரைக்கு வர அவர் தான் காரணம். இந்தப்படத்தை எடுக்க தீர்மானித்துவிட்ட பிறகு, படத்தை திட்டமிட ஆரம்பித்த போதே, நிறைய சிக்கல்கள் வந்தது. அதையெல்லாம் தாண்டி தான் இப்படத்தை எடுத்தோம். படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் வேண்டுமென பல காலமாக தேடினோம், நிறைய பேர் எங்கள் பட்ஜெட்டில் வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள், இறுதியாகத்தான் பிரபு வந்தார். பணத்தை மதிக்காதவர், சினிமாவை நேசிப்பவர். இந்தப்படத்திற்கு ஒரு தூணாக இருந்தவர் எடிட்டர் அனில். எங்களுக்கு படத்தில் என்ன சிக்கல் வந்தாலும் அவரிடம் தான் சொல்வோம். அவர் அதை சரிசெய்து தருவார். இசையமைப்பாளர் ஜோஷ் அருமையான இசையை தந்திருக்கிறார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். இந்த ஆறு வருடத்தில் நான் அதிகம் பேசியது சந்தீப் உடன் தான். நிறைய சண்டை போட்டிருக்கிறோம், எப்போதும் ஒரு சிறந்த நண்பராக இருந்திருக்கிறார். எனக்காக ஒரு மிகச்சிறந்த பாத்திரத்தை இந்தப்படத்தில் உருவாக்கி தந்திருக்கிறார். எல்லா நடிகருக்கும் இந்த மாதிரியான பாத்திரம் கிடைத்து விடாது, ஆனால் எனக்கு முதல் படத்தில் கிடைத்திருக்கிறது. சந்தீப் மிகச்சிறந்த திறமையாளர் அதை இந்தப்படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். நாயகி உபாஷனா யாரும் நடிக்க தயங்கும் பாத்திரத்தில் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார். அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. ஒரு புதுமையான ஹாரர் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி.

தொழில்நுட்ப குழு

இயக்கம் – A சந்தீப் SAI FILM
ஒளிப்பதிவு – KB பிரபு
இசை – ஜோஷ் ஃப்ராங்க்ளின்
படத்தொகுப்பு – அனில் கிரிஷ்
கலை – மோகன மகேந்திரன்
நடன அமைப்பு – ராஜு முருகன்
ஒலி வடிவமைப்பு – A சதீஷ் குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM
நிர்வாக தயாரிப்பு – ராஜு
லைன் புரடியூசர் – குணசேகர் ரெட்டி
இணை தயாரிப்பு – K வெங்கி ரெட்டி
தயாரிப்பாளர் – வெங்கட் ரெட்டி