பிரைம் வீடியோவின் தலைவெட்டியான் பாளையம்செப்டம்பர் 20 தேதி வெளியாகிறது.

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார் (Abishek Kumar,) சேத்தன் கடம்பி, (Chetan Kadambi), தேவதர்ஷினி (Devadarshini,) நியாதி (Niyathi,) ஆனந்த் சாமி (Anand Sami) மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்..
பால குமாரன் முருகேசன் (Balakumaran Murugesan) எழுத்தில், நாகா (Naga), இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தலைவெட்டியான் பாளையம் இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது.

இந்த தலைவெட்டியான்பாளையம் எனும் இணையத் தொடர் பிரைம் உறுப்பினர் பட்டியலில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499 மட்டும் செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்
தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் அதன் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும சுவராசியமான திடீர் திருப்பங்களை நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

“எங்களின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த பார்வையாளர்களின் மேம்பட்டு வரும் ரசனைகள் மற்றும் விருப்பத்தேர்வுகளுக்கு ஈடு செய்யும் வகையில், எங்கள் ரசிகர்கள், தொடர்புபடுத்தி பொருத்திப் பார்த்துக்கொள்ளக் கூடிய அதிகாரபூர்வமான மற்றும் மனதைக் கவரும் கதைக் களத்தைக் கொண்ட உருவாக்கங்களை எங்கள் உள்ளூர் மொழி உள்ளடக்கங்களுடன் விரிவுபடுத்த எங்களை முன்னோக்கி உந்தித் தூண்டுகிறது. புதிய, நூதனமான, இந்த மண்ணில் வேரூன்றிய கதைகளை வழங்குவதில் எங்களுக்குள்ள தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொள்ளும் TVF போன்ற நீண்டகால தயாரிப்பாளர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு இந்த அசல் தமிழ் நகைச்சுவை இணையத் தொடர் தலைவெட்டியான் பாளையம் எனும் படைப்பை வழங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம். பாலகுமாரன் முருகேசன் எழுத்தில் உருவான இந்த சீரீஸ், நகைச்சுவையோடு இணைந்த மகிழ்ச்சி பொங்கச்செய்யும் மனதுக்கு இதமான தருணங்களின் ஒரு கலவையை, எளிமையான அதேசமயம் மனதைக் கொள்ளை கொள்ளும் கதையின் வழியாக நம் முன்னே காட்சிப்படுத்தி நம்மைக் கவர்ந்திழுத்து கட்டிப்போட்டுவிடுகிறது. அதிகாரபூர்வமான கிராமப்புற வசீகரம் மற்றும் உலகளாவிய சமூக இயக்கவியலின் கருப்பொருள் அதன், விதிவிலக்கான பல்திறன் வாய்ந்த நடிகர்கள் குழுவால், உயிர்ப்பிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தொடர் பார்வையாளர்களைக் பெருமளவில் கவரும் என்பது உறுதி” என்று பிரைம் வீடியோ இந்தியா, கன்டெண்ட் லைசென்சிங் டைரக்டர் மனிஷ் மெங்கானி கூறினார்.