விஜய் பட இயக்குனர் சித்திக் மாரடைப்பால் உயிரிழந்தார் !

 

கேரளாவை சேர்ந்த டைரக்டர் சித்திக், 1986 ஆம் ஆண்டு ‘பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ‘ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான கதை களத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து மோகன்லாலை வைத்து ‘நாடோடிக்காட்டு’ என்கிற படத்தை. இயக்கினார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலக முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் இயக்குனராகவும் மாறினார்.

இவர் தமிழில் தளபதி விஜய்யை வைத்து, பிரெண்ட்ஸ் மற்றும் காவலன் படத்தை இயக்கினார். அதே போல் விஜயகாந்த் – பிரபு தேவா நடிப்பில் வெளியான, சூப்பர் ஹிட் படமான ‘எங்கள் அண்ணா’ படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் அரவிந்த் சாமியை வைத்து ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

Vijay-Suriya 'Friends' movie director Siddique hospitalized in critical  condition - Tamil News - IndiaGlitz.com

அதே போல் மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளியான ‘பிக் பிரதர்’ படத்தை இயக்கிய நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சித்திக் நிமோனியா மற்றும் கல்லீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மூன்று மணியளவில், அவருக்கு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது இயக்குனர் சித்திக் காலமாகி விட்டார் என்று தகவல் வந்துள்ளது