நமக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்! ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பதிவு!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை போன்ற படங்களை முன்னதா டைரக்ட் பண்ணி இருந்தார். இவரோட இயக்கத்தில் உருவாகிவரும் மூன்றாவது படமான லால் சலாம், கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வருது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிச்சு வாராய்ங்க

படத்தின் சூட்டிங் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது புதுச்சேரியில் நடந்து வருது. இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த், கேமியோ ரோலில் நடிச்சு வாறார். விளையாட்டை மையமாக வைத்து வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், லால் சலாம் படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுது.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டுள்ளார். அதில் நமக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் அப்படீன்னு சொல்லி இருக்கார்.

மேலும் அந்த பதிவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அதிகமான வியர்வையுடன் அவர் கருத்து காணப்படுகிறார். கருப்பு கண்ணாடியுடன் அவர் இந்தப் புகைப்படத்தில் இருந்தாலும் வழக்கமான அவரது க்ளோ இந்தப் புகைப்படத்தில் மிஸ்ஸிங். மழை, வெயில் பார்க்காமல் அவர் லால் சலாம் படத்திற்காக உழைத்து வருவது இந்தப் புகைப்படத்தில் அப்பட்டமாக தெரியவருது