லைகா உடன் கைகோர்க்கும் ஐஸ்வர்யா தனுஷ்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், நடிகர் தனுஷ்  மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ் நடிப்பில் 2012-ல் வெளியான 3 திரைப்படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  அதன் பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் “ வை ராஜா வை “ திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. 

 

இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பிரம்மாண்ட படங்களையும், பல முக்கிய படங்களையும் தயாரித்து வரும் லைகா நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தினை பற்றி அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ்  இயக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வை ராஜா வை திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா  தனுஷ் எந்த படமும் இயக்கவில்லை.   தற்போது ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படம் குறித்து அதிகார பூரவ தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும், இந்தப் படத்துக்கான கதையை சஞ்சீவ் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது.