ஜூன் 13 தமிழாற்றுப்படை வரிசையில் ஜெயகாந்தன் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்

தமிழாற்றுப்படைஎன்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்கிறார்.

இதுவரை தொல்காப்பியர்திருவள்ளுவர்இளங்கோவடிகள்கம்பர்
அப்பர் –  திருமூலர்ஆண்டாள் –– வள்ளலார்மறைமலையடிகள்.வே.சாமிநாதையர்பாரதியார்பாரதிதாசன் கலைஞர்கண்ணதாசன் –  புதுமைப்பித்தன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியவர்களைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.  அந்த வரிசையில் இப்போது எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இது இவரது 17ஆவது கட்டுரையாகும்.

இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசு என்று கருதப்படுகிற ஞானபீடம் இதுவரையில் தமிழுக்கு இரண்டு முறைதான் வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனுக்குப் பிறகு ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆவார். படைப்பாளிகளைக் கொண்டாடுகிற இனத்தில்தான் மொழி உயிர்ப்போடு இருக்கும். தமிழாற்றுப்படை வரிசையில் சேர்வதற்கு ஜெயகாந்தனுக்குத் தகுதி உண்டு. விளிம்புநிலை மக்களின் வாழ்வை வலியை ரத்தமும் சதையுமாய் உரித்த மொழியில் எழுதிக்காட்டிய உணர்ச்சிமிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன்.  எமக்குத் தொழில் கவிதை என்று கூறியவர் பாரதி; எனக்குத் தொழில் எழுத்து என்று வாழ்ந்தவர் ஜெயகாந்தன். அவர்காலத்தில் அதிகமாய் நினைக்கப்பட்டவரும் அவர் காலத்துக்குப் பிறகு அதிகமாய் மறக்கப்பட்டவரும் ஜெயகாந்தன். அவர் எழுத்தின் பெருமையைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதும் பழைய தலைமுறைக்குப் புதுப்பித்துக்கொடுப்பதும் காலத்தின் தேவைஎன்றார் கவிஞர் வைரமுத்து.

ஜூன் 13 புதன் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை நாரத கான சபாவில் தமிழாற்றுப்படை வரிசையில் ஜெயகாந்தன் கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார்.

வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், வெங்கடேஷ், ராஜசேகர், தமிழரசு, செல்லத்துரை, ராஜபாளையம் ராமகிருஷ்ணன், மாந்துறை ஜெயராமன், காதர்மைதீன், சண்முகம், பானுமதி, கலைமதி ஆனந்த் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.