R.K.நகர் தமிழக திரையரங்க உரிமத்தை தேணான்டாள் பிலிம்ஸ் பெற்றுள்ளது

சரவண ராஜன் இயக்கத்தில், வெங்கட் பிரபுவின் ‘ப்ளாக் டிக்கெட் கம்பெனி’ நிறுவனமும் பத்ரி கஸ்துரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ‘R.K.நகர்’ படம், தனது சுவாரஸ்யமான தலைப்பாலும், அதை விட சுவாரஸ்யமான டீசராலும் , 2018 ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ஆகியுள்ளது. வைபவ் மற்றும் சனா அல்தாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘R.K.நகர்’ படம் வர்த்தக தரப்பிலும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவருகிறது . விநியோகத்தில் ஜாம்பவனான ‘தேணான்டாள் பிலிம்ஸ்’ இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமத்தை பெற்றுள்ளது இப்படத்தில் பலத்தை மேலும் கூட்டியுள்ளது.

‘R.K.நகர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்த கையோடு Post Production பணிகள் தொடங்கியுள்ளன. பிரேம்ஜி அமரனின் இசையில் , S வெங்கடேஷின் ஒளிப்பதிவில், பிரவீன் K L படத்தொகுப்பில் ‘R.K.நகர்’ உருவாகியுள்ளது.