Vivekananda Navaratri Day 6 Photos

வித்யா மந்திர் மாணவர்களின் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியுடன், விவேகானந்தா நவராத்திரியின் ஆறாம் நாள் விழா தொடங்கியது. சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டது.

சுவாமி சத்யாப்பிரபாநந்த மகாராஜ் ‘ விவேகானந்தர் இல்லத்தில் சுவாமிஜியின் அரிய அனுபவங்கள்” குறித்து பேசினார். சுவாமி விவேகானந்தர் இங்கு ஒரு நாள் ஆன்மீக அனுபவம் கிட்டியது. இங்கு அவரது ஆன்மீக அனுபவங்களை பற்றி நமக்கு வேறு எதுவும் தெரியாது. ஆனால் அந்த அனைத்து 9 நாட்களும் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இசைக்கருவிகள் முழங்க 1000க்கும் மேற்பட்ட மக்கள் சென்னையில் அவரை வரவேற்க வந்தனர். அவரது வண்டியை இளைஞர்களே இழுத்து சென்றனர். சுவாமிஜிக்கு இது ஒரு உற்சாகமளிக்கும் சம்பவமாக அமைந்தது.
“நீங்கள் திருஞானசம்பந்தரின் அவதாரம்” என்று கூறு ஒரு பெண்மணி சுவாமிஜியை வணங்கினார். சுவாமிஜி மிகவும் நெகிழ்ந்து போனார். திருப்பதி பக்தர்கள் அவரை ‘வைகுண்ட இருந்து வந்தவர்’ என்று கூறினர்.

சுவாமி விவேகானந்தர் உணர்ச்சி மிகுந்த தருணங்களும் இருந்தன “நீங்கள் ஒரு பிராமணர் அல்லவே, எப்படி சந்நியாசியானீர்கள்?” என்றார் ஒருவர். அவருக்கு ஒரு பொருத்தமான பதில் கொடுத்தார். ஆனால் வார்த்தைகளால் அவரை காயப்படுத்தவில்லை.

சுவாமி விவேகானந்தர் நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் பார்க்க கூட்டம் நடந்த அரங்கிற்கு வெளியே வந்தார். இது அவர் சக மனிதர்கள் மீது வைத்திருந்த அன்பை கருணையைக் காட்டுகிறது. இந்த இல்லத்தில், அந்த நாட்களில், சுப்பிரமணிய ஐயர் வந்தார். அனைத்து மக்களுக்கு எதுவாக, எல்லா மதத்தவரும் வரும் வண்ணம் ஒரு சமைய சமரசக் கோவில் ஸ்தாபிக்கும் யோசனையை தெரிவித்தார். சுவாமிஜி இங்கிருந்து செல்லும் நேரத்தில், சென்னை மக்கள் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டனர் இருந்தது. சுவாமி விவேகானந்தர், தனது சகோதர துறவி ஒருவரை அனுப்புவதாக உறுதிமொழி அளித்தார்.

ஸ்ரீ எல் சபாரத்தினம், தலைவர், பாரதிய வித்யா பவன் நிகழ்வின் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவருடைய முக்கிய உரையில் : ராமகிருஷ்ண மடம் மற்றும் வித்யா பவன் ஒரே கருத்துடன், ஒரே கொள்கையுடையவை. சுவாமி விவேகானந்தர், ஆன்மீக எழுச்சியே இந்தியாவை உலகின் தலைசிறந்த நாட்டாக ஒரே வழி என்று கூறினார். பாரதிய வித்யா பவன் சுவாமி விவேகானந்தர் பற்றி 29க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

தெய்வீக புத்தக விழாவில் நிறைய உதவிய ஸ்பென்சர் எஸ் பாலசுப்ரமணியம் கௌரவப்படுத்தப்பட்டார். தன்னுடைய சுருக்கமான முகவரியை இல் “ஆத்மனோ மோக்ஷார்தம் ஜகத் ஹிதாயச” என்ற கொள்கையுடன் சுவாமிஜி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்தார். மக்களின் சேவையே, மகேசன் சேவை என்பதை இன்றும் செய்து காட்டுகிறது இந்த திருமடம்.

ஆறாம் நாளின் கடைசி மற்றும் சிறப்பு நிகழ்ச்சியாக பொம்மலாட்டம் நடைப்பெற்றது. சுவாமி விவேகானந்தர் மீதான பொம்மலாட்ட நிகழ்ச்சியை ‘மயிலாடுதுறை, ஸ்ரீ கணநாதர் பொம்மை நாடக சபா’ வழங்கினர். பார்வையாளர்கள் ஆர்வமுடன் ஈர்க்கப்பட்டனர். சுவாமிஜின் வாழ்க்கையை சுருக்கமாக சிறப்பாக பொம்மலாட்டம் நடத்தினர். இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சியை மக்கள் பெரிதும் வரவேற்றனர், ரசித்தனர்.  நவராத்திரி நிகழ்விள் 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Vivekananda Navaratri Day 6 Photos (1) Vivekananda Navaratri Day 6 Photos (2) Vivekananda Navaratri Day 6 Photos (3) Vivekananda Navaratri Day 6 Photos (4) Vivekananda Navaratri Day 6 Photos (5)