கொரோனா நோயை எதிர்த்து போராடும் முன்கள பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சிக்கன்பிரியாணி!

கொரோனா நோயை எதிர்த்து மக்களை காக்க போராடும் நீலாங்கரையில் உள்ள அரசு பணியாற்றிவரும்…

1.தூய்மைப் பணியாளர்கள்
2.செவிலியர்கள்
3.காவல் துறையினர்
4.முன்களப் பணியாளர்கள்
5.தமிழ்நாடு மின் உற்பத்தி தொழிலாளர்கள் 200 பேருக்கு தெம்பூட்டும் வகையில் சிக்கன்பிரியாணி ,தண்ணீர்பாட்டில் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது .

காஞ்சிபுரம் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொறுப்பாளர் மாவட்ட இளைஞரணி தலைவர் இசிஆர்.பி.சரவணன் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது .