60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த முக்தா பிலிம்ஸின் வைர விழா

பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள் முக்தா சகோதரர்கள். சிறு வயதில் தந்தை இழந்து பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945 இல் முக்தா ராமசாமி Modern theatres ல் Typist ஆக வேலைக்கு சேர்ந்தார்.

“பர்மா ராணி” தயாரிப்பின் கால கட்டத்தில் .. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் அதை தயாரித்து இயக்கிய TR சுந்தரம்..,கோபத்தில் அவரை நீக்கி விட்டு அவரே கதா நாகனாகவும் நடித்தார். அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாக வேலை செய்ய சொல்லி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார்.

பின்பு 1947 கம்யுனிச கொள்கையில் பிடிப்பு கொண்ட சீனிவாசனை. முக்தா ராமசாமியின் வேண்டுகோளுக்கு இனங்க வேறு பாதை அமைத்து தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிய வைத்தார் TR Sundaram.. திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் TRS சொல்லும் வேலையை முதற் கடமையாக கருதி செய்து முடிப்பார் முக்தா ராமசாமி. முக்தா சினிவாசன் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் வேலை செய்து ” முதலாளி ” என்கிற படத்தை இயக்கினார்.. முக்தா ராமசாமி படங்களை விநியோகமும் செய்தார்.

முதலாளிக்கு பிறகு இயக்கிய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் வேலை இல்லாமல் இருந்த சினிவாசனுக்கு அண்ணனோட சேரந்து சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க சொல்லி அறிவுறுத்தி உதவியும் செய்தார் திரையுலக பிதாமகர் இயக்குனர் K சுப்ரமணியம்.

Novembe 1959 இல் Meenakumari நடித்த ” Ardhangini” என்ற ஹிந்தி வெள்ளிவிழா படத்தை விலைக்கு வாங்கினர்கள்.1- 4 -1960 இல் அதை தமிழாக்கம் செய்து “பனித்திரை” பெயரில் படபிடிப்பை தொடங்கினார்

கதாநாயகன் A Nageswararao, கதாநாயகி B சரோஜாதேவி.

தெலுங்கில் A நாகேஸ்வராராவுக்கு பல படங்கள் வெற்றி பெற்று Top hero அந்தஸ்த்தை பெற்றார்.

அதனால் Advance ஸோடு shooting செலவையும் சேரத்து வேறு நடிகரை வைத்து எடுங்கள் என்று திருப்பி கொடுத்தார் படபிடிப்பு நின்றது 8 மாதங்கள் கழித்து ஜெமினிகணேசன் நடிக்க ஒப்பு கொண்டார் மீண்டும் படபிடிப்பு தொடங்கியது பல தடங்கள்களை சந்தித்து 1961 ரிலீஸானது. படம் ஓரளவு ஒடினாலும் கடனை அடைக்கத்தான் முடிந்தது பிறகு ” இயத்தில் நீ “, பூஜைக்கு வந்த மலர்” சுமாராக ஓடினாலும்

தேன்மழை 92 நாட்கள் ஓடி பெரிய வெற்றியை கண்டது.

“நினைவில் நின்றவள” பொம்மலாட்டம்” வியாபார ரீதியில் வெற்றி அதன் பிறகு “நிறைகுடம்” சிவாஜிகணேசன் வைத்து முதல்படம் ,வியாபார ரீதியில் மிக பெரிய வெற்றி அடைந்தது.

தவபுதல்வன், சூரியகாந்தி, அந்தமான் காதலி, பொல்லாதவன், கீழ்வானம் சிவக்கும், சிவப்பு சூரியன், சிம்லா ஸ்பெஷல், பரிட்சைக்கு நேரமாச்சு, நாயகன், கதாநாயகன் வாய்கொழுப்பு போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன.

சிவகுமார் , லட்சுமி, ஸ்ரீப்ரியா , நடிப்பில், சிவசங்கரி அவர்களின் கதையில், விசுவின் திரைக்கதை, வனத்தில் முக்தாசீனிவாசன் இயக்கத்தில் வெளியான அவன் அவள் அது 25 வாரம் ஓடி விழாக்கள் கொண்டாடப்பட்டது. இந்த படங்கள் உட்பட 41 படங்களை தயாரித்துள்ளது முக்தா பிலிம்ஸ்.

வருகிற 2020 இல் ” ஶ்ரீ வேதாந்த தேசிகர் ” திரைக்கு வர இருக்கிறது.

இந்த 60 ஆண்டு பயணத்தில் எங்களுக்கு தோல் கொடுத்த நடிகர்கள், நடிகைகள் மற்றும தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு …நன்றி தெரிவிக்கும் வகையில் முக்தா பிலிம்ஸ் வைரவிழா என்ற பெயரில் இம்மாதம் ( டிசம்பர் ) 22 ம் தேதி மாலை 5 மணியளவில் எம்.ஆர்.சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், குமாரராஜா ஹாலில் நடைபெற உள்ளது.

விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

விழாவிற்கான அனைத்த ஏற்பாடுகளையும் முக்தா ராமசாமி குடும்பத்தினர் மற்றும் முக்தா சீனிவாசன் குடும்பத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.