சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ யார்? இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்!

அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். ‘கழுகு – 2’ படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை ‘பேராண்மை’ , ‘பூலோகம்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு – கோபிகிருஷ்ணா.

‘க்ரைம் நாவல்’ மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்படும் என ஏற்கனேவே அறிவித்திருந்தார்கள்.

அதன்படி இயக்குனர்/தயாரிப்பாளர் லிங்குசாமி நாளை காலை 11 மணிக்கு படத்தின் கதாநாயகன் யார் என்பதையும் படத்தின் பெயரையும் அறிவிக்கிறார்