அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் – ஜீ.வி.பிரகாஷ் குமார்

நான் இசையமைப்பாளராகவும் பின்பு நடிகனாகவும் அறிமுகமான நாள் முதல் எனது இசையிலும் நடிப்பிலும்வெளியான படங்களுக்கு இன்று வரை ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இசையமைப்பாளராக எனக்கு பேராதரவு அளித்து வந்த நீங்கள் நான் நடிகனாக மாற புதிய முயற்சிமேற்கொண்டதற்க்கு நீங்கள் அளித்த ஆக்கமும் ஊக்கமும் என்றென்றும் எனக்கு ஊன்று கோளாய் இருந்து வந்துள்ளது.

தற்போது கேனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “புருஸ் லீ” பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் “அடங்காதே”, திருக்குமரன் எண்டர்டெயின்மேண்ட் தயாரிப்பில் வெங்கட் பக்கர் இயக்கத்தில் “4G”, பிரபல ஓளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சசி இயக்கத்தில் உருவாகும் படம், இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் படம், ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறேன்.

எனது இசைக்கும் நடிப்பாற்றலுக்கும் தாங்கள் அளித்து வரும் எல்லையற்ற அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,

ஜீ.வி.பிரகாஷ் குமார்