வெற்றிகரமாக சிங்கப்பூரை சென்றடைந்தனர் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ குழுவினர்

‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர், அவர்கள் படத்தின்  ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட முடிவு செய்து,  கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று தங்களின் தொலைதூர பயணத்தை ஆரம்பித்தனர்…. சென்னையில் தொடங்கி பூட்டான், மியன்மார், தாய்லாந்து மற்றும் மலேசியா என ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலை வெளியிட்ட இந்த குழுவினர், தற்போது தங்கள் படத்தின் இறுதி பாடலை வெளியிடுவதற்காக, கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளனர். ஏறக்குறைய முப்பது நாட்கள் பயணத்தில், கடினமான சூழ்நிலைகளை கடந்து, தற்போது சிங்கப்பூரை அடைந்துள்ள ஜிப்ரான் மற்றும் குழுவினருக்கு சிங்கப்பூர் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“எங்களின் பயணத்தின் போது நாங்கள் பல தடங்கல்களை சந்திக்க நேரிட்டது…ஆனால் எங்கள் குழுவினர் மற்றும் ரசிகர்களின் பேராதரவால் இந்த பயணத்தை நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம்…” என்று உற்சாகத்துடன்  கூறுகிறார் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர்.